Wednesday, June 4, 2008

பாசமுள்ள மதுரை மலர்!!!

'பாச மலர்' பதிவர் மதுரை காரவுக, பொழைப்புக்காக சவுதி அரேபியாவுல இருக்காக,
மதுரை தமிழ் இவுக எழுத்தில் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமுங்க.அவிங்க ஊரு பாஷை எல்லாம் மறந்துட்டாய்ங்க போல:))


காதல் 'கவிதை ' எல்லாம் கிறுக்கிற வயசுல இவுக இல்லீங்கறதால ,
சிந்திக்க வைக்கும் அருமையான கவிதை எல்லாம் நிறைய எழுதிருக்காக.


பாசமலரின் எழுத்தில ஒரு வித சோகம், ஏக்கம் எல்லாம் மறைஞ்சிட்டிருக்கும், அது ஏன்னுத்தேன் புரியல!!!


மனம்திறந்து சொல்ல நினைக்கிறதை அழகாக பதிவுல கேட்டுப்புடுவாக.


யார் பித்தன் ...அப்படின்னு ஒரு சிறுகதை எழுதிருப்பாக பாருங்க,
அந்த கதைல ஒரு எழுச்சி தெரியும், அவ்வளவு நல்லா எழுதிருக்காக.
மனசார பாராட்டெல்லாம் தெரிவிப்பாக மத்தவக பதிவு பின்னூட்டதுல,


மகராசி நல்லாயிருக்கோனும் நீங்க:))

Tuesday, June 3, 2008

கவிஞர் 'பிரேம்குமார்'

கவிஞர் பிரேம்குமார் சண்முகமணி நல்லா கவிதை எழுதுவாருங்க, 'காதல்' கவிதைகள் மட்டுமில்லாம இவரு நட்பு தலைப்பிலும் பல கவிதைகள் எழுதிருக்காருங்க, அதுக்காக இவரை பாராட்டியே ஆவனும்.

குறிப்பிட்ட சில கவிஞர்கள்[இவரோட நண்பர்கள்!!] பதிவுல மட்டுந்தேன் இவரு பின்னூட்டம் போடுவாரு.[நல்லா[வே] இல்லை உங்க கொள்கை:))]

'நானும் காதலிக்கிறேன்' அப்படின்னு [பகிரங்கமா??] தொடர் கதை எல்லாம் எழுத முயற்சி பண்ணினார், ரொம்ப நல்லாத்தேன் எழுதியிருந்தாரு........
என்னாச்சோ???
எந்த பயபுள்ள கண்ணு போட்டுச்சோ???
பிரேம்குமார் அப்புறமா கதை எழுதவே இல்லை(:

'இது காதல் காலம்'னு இவர் எழுதின கவிதத 'பட்டாம்பூச்சி' படத்தோட சூப்பரா இருக்கும்,
என்னா டவுட்டுனா........கவிஞரின் கவிதை முற்றிலும் கற்பனையோ??
கற்பனை கவிதையாகவே தோன்றுவதால் ஏதோ ஒன்னு மிஸ்ஸிங் ஆட்டம் எனக்கு தோனுது, உங்களுக்கு???

தொடர்ந்து நிறைய கவிதை[காதல்??] எழுதுங்க பிரேம்குமார் அன்னாச்சி:))

முதல் வம்பு.....'குசும்பு' !!

சமீபத்தில் மணவாழ்க்கையில் வலது கால் எடுத்து வைத்திருக்கும் பதிவர் 'குசும்பன்' னின் வலைதளம் பத்தி பேசுவோமா........

இவரு பேருக்கு பொறுத்தமா ரொம்பத்தேன் குசும்பு பண்ணுவாரு, மனசுல தோன்றதை 'சட்டுன்னு' யாருக்கும் பயப்படாம பதிவுல சொல்லுவாரு பாருங்க.......அங்க தான் இவரு நிக்கிறாரு[?]

பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கும் குசும்போட தான் பதிலடி கொடுப்பாரு, உடம்பு முழுக்கு அம்புட்டு கொழுப்பு.......ஸாரி குசும்பு!

அஜால்ஸ் குஜால்ஸ் பதிவெல்லாம் போட்டு தாக்குவாரு, 'பெல்லி டான்ஸ்' படமெல்லாம் போட்டு பட்டைய கிழப்பினார்.........இனிமே அப்படி பட்டைய கிழப்பினா , வீட்டுல தங்கமணி 'பூரி' கட்டை உம்மண்டையை பொழக்கும் ன்னு எச்சரிக்கை விட்டிருக்கிறதா கேள்வி:)

மனுஷனுக்கு புகைப்படக்கலையிலும் நல்லா ஆர்வம் இருக்கு, இல்லீனா தைரியமா தன்னையே படம் புடிச்சு பதிவுல போடுவாரா??

ஆனந்த விகடன் பத்திரிக்கையில கூட விளம்பரமெல்லாம் கொடுத்தாக இவுகளுக்கு:))

அன்னாச்சி வீட்டுல குறும்பு, பதிவுல குசும்புனு கலக்குங்க, வாழ்த்துக்கள்!!

தமிழ் வலையுலகை வம்பளக்கலாம் வாங்க!

தமிழ் வலைபதிவர்களின் எழுத்துக்களின் அருமை பெருமைகளை வம்பளக்கவே இந்த வலைத்தளம்!



யாரையும் இகழவோ,மனம் புண்படுத்துவதோ இத் தளத்தின் நோக்கமில்லபா கண்ணுகளா,

அதனால கிண்டல் கேலிகளை ரசிக்கனும், ஆராய கூடாது....முக்கியமா கொவச்சுக்க கூடாது, சரியாப்பூ:)